Sunday, 11 June 2017

TNPSC GROUP -2A TAMIL PART-2
















TNPSC GROUP - 2A

TAMIL   -   (PART- 2)

ஆழ்வார்கள்


(நாலாயிரப் பிரபந்த முறை வரிசை)

1.பெரியாழ்வார்
2.ஆண்டாள்
3.குலசேகராழ்வார்
4.தொண்டரடிப்பொடி ஆழ்வார்
5.திருப்பானாழ்வார்
6.மதுரகவியாழ்வார்
7.திருமங்கையாழ்வார்
8.பொய்கையாழ்வார்
9.பூதத்தாழ்வார்
10.பேயாழ்வார்
11.நம்மாழ்வார்

திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்

1. பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
2. கருடாம்சம் - பெரியாழ்வார்
3. சுதர்சனம் - திருமழிசையாழ்வார்
4. களங்கம் - திருமங்கையாழ்வார்

ஆழ்வார்களும் பெயர்களும் 

1.பொய்கையாழ்வாரின் பக்திபாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி

2. திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப்பெறுபவர் - பொய்கையாழ்வார்

3. பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஆழ்வார் - பூதத்தாழ்வர்

4. சூரியனை விளக்காக ஏற்றியவர் - பொய்கையாழ்வார்

5. ஞானத்தை விளக்காக ஏற்றியவர் - பூதத்தாழ்வார்

6. பருப்பொருளை விளக்காக ஏற்றியவர் - பொய்கையாழ்வார்

7. நுன்பொருளை விளக்காக ஏற்றியவர் - பூதத்தாழ்வார்

8. தாமரையில் அவதரித்தவர் - பொய்கையாழ்வார்

9. குடுக்கத்தியில் அவதரித்தவர் - பூதத்தாழ்வார்

10. செவ்வல்லியில் அவதரித்தவர் - பேயாழ்வார்

11. சக்கரத்தாழ்வார், பக்தி சாகரர் என்ற பெயர்களை உடையவர் - திருமழாசையாழ்வார்

12. பட்டர்பிரான் , கிழியறுத்த ஆழ்வார் , விஷ்னு சித்தர் என்ற பெயர்களை உடையவர் - பெரியாழ்வார்

13. கொல்லிக் காவலன் , கூடல் நாயகன் , கோழிக்கோ எனப்படுபவர் - குலசேகராழ்வார்

14. சடகோபர் , பராங்குசர் , மாறன் எனப்படுபவர் - நம்மாழ்வார்

15. கலிநாடன், கலிகன்றி , அருள்மாரி, பரகலன், குறையலாளி, மங்கைவேந்தன், மங்கையர்கோன் எனப்படுபவர் - திருமங்கையாழ்வார்

SaharaCoaching.blogspot.com

No comments:

Post a Comment